பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு


பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு
x

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிபுரியும் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு இன்று வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிபுரியும் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இன்று நடந்தது. அதன்படி செயற்பொறியாளர் ஒருவருக்கு கண்காணிப்பு பொறியாளராகவும், 13 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கி அதற்கான பணி ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் சத்திய மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story