முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் - தி.மு.க. அறிவிப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் - தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2024 9:03 AM GMT (Updated: 28 Feb 2024 10:20 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது

சென்னை,

தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக, தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், மார்ச் 1-ம் தேதியன்று தலைவர் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர், தி.மு.க.வை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

பெரியாரின் சமூகநீதியையும், அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அத்தகைய தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்திடுவது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, "எல்லோருக்கும் எல்லாம்", "திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!" நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story