கத்தியால் குத்திய 2 பேர் கைது


கத்தியால் குத்திய 2 பேர் கைது
x

கத்தியால் குத்திய 2 பேர் கைது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 30). கொத்தனார். இவர் இந்திரா நகரிலுள்ள அய்யா ஊருணி சுடுகாடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த கள்ளர்தெரு காமாட்சி (28), வசந்தநகர் குமார் வீரபத்ரன் (29) ஆகியோர் சரவணக்குமாரிடம் மதுபோதையில் தகராறு செய்தனர். அவர் கண்டித்தபோது ஆத்திரமடைந்தவர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். இதனை அவர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த கருவேப்பிலைக்காரத்தெருவை சேர்ந்த விக்ரம் (29) தடுக்க முயன்றுள்ளார். அவரையும் கத்தியால் குத்தி உள்ளனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story