மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம்
x

கலவை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த முள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25), அவரது அண்ணி கலா ஆகிய இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். தனியார் வேளாண்மை கல்லூரி அருகே சென்ற போது அங்கு சாலையோரம் நின்றிருந்த அரும்பாக்கத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி கருப்பாயி (62) மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோகன்ராஜ், கலா, கருப்பாயி ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story