வேலூரில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்


வேலூரில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

அமாவாசையையொட்டி வேலூரில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

வேலூர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாத மகாளய அமாவாசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமாவாசைகளில் மகாளய அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. மகாளய அமாவாசை திருவிழா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூருக்கு சென்றனர்.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்படி வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பஸ்கள் அதிகாலை முதல் இயக்கப்பட்டன. இதில், குடும்பம், குடும்பமாக பக்தர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர். இதேபோன்று வேலூர் மண்டலம் சார்பில் சென்னை, ஆற்காடு, திருப்பத்தூரில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story