மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி


மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி
x

ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளார்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் நித்தின் (வயது 20). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பயோடெக் 3 ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளார். அப்போது அங்குள்ள கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்துள்ளார். அப்போது ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

சற்று நேரத்தில் அவரது உடல் கடற்கரை கோயில் அருகில் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் உடலை மிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story