இறந்து கிடந்த காட்டெருமை


இறந்து கிடந்த காட்டெருமை
x

ஓடை அருகே காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது.

திண்டுக்கல்

நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் பெரியாறு ஓடை உள்ளது. இதன் அருகே காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் குமரேசன், வனக்காப்பாளர் எம்.ராஜேந்திரன், வனவர் தர்மராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதேபோல் கோசுக்குறிச்சி கால்நடை உதவி மருத்துவர் டி. ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்து கிடந்த காட்டெருமையை பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கை கிடைத்த பிறகு தான், காட்டெருமை சாவுக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இறந்து கிடந்த காட்டெருமை 10 வயது உடையது என்றும், உடல்நலக்குறைவால் அது இறந்திருக்கலாம் என்றும் கருதி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story