வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து


வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
x

வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி கலைஞர் நகரை சேர்ந்தவர் பழனிசாமி மகன் நாகராஜ் (வயது 27). டிரைவர். இவரது நண்பர் பள்ளத்திவிடுதியை சேர்ந்த நடேசன் மகன் இளஞ்சேகரன். இவர்கள் இருவரும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளஞ்சேகரன் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் நாகராஜின் வலது தோள்பட்டை பின்புறத்தில் குத்தினார். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளஞ்சேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story