இணையவழியில் பயோமெட்ரிக்கில் பதிவு செய்து விற்பனை செய்யும் முறை


இணையவழியில் பயோமெட்ரிக்கில் பதிவு செய்து விற்பனை செய்யும் முறை
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழியில் பயோமெட்ரிக்கில் பதிவு செய்து விற்பனை செய்யும் முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விழுப்புரம்

விழுப்புரம்

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயோமெட்ரிக்கில் பதிவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள், தங்கள் நெல் மூட்டைகளை இணையவழியில் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்து விற்பனை செய்யும் முறை இன்று (வியாழக்கிழமை) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் தலையீட்டை தடுப்பதுடன் விவசாயிகள், தங்களது நெல் மூட்டைகளை கால தாமதமின்றி விற்பனை செய்துகொள்ள முடியும்.

துல்லியமாக பதிவேற்றம்

மேலும் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி பெறுவதன் மூலம் விவசாயிகளின் விவரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த விரல்ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story