தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் வி.மருதூர் மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் துரை மகன் யோகேஸ்வரன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் கே.கே.சாலையில் சென்றபோது கே.கே.சாலை அண்ணா நகரை சேர்ந்த ராகுல், குணா, சபரி ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிளில் யோகேஸ்வரன் மீது மோதுவதுபோல் முந்திச்செல்ல முயன்றனர். இதை தட்டிக் கேட்ட யோகேஸ்வரனை ராகுல் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினர். பின்னர் இதுகுறித்து யோகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் ராகுல் உள்பட 3 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story