ஜூன் 5-ல் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


ஜூன் 5-ல் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

டெல்டா மாவட்டங்களில் நடக்கும் தூர்வாரும் பணிகளை ஜூன் 5-ம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை,

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே கூட இயக்கப்படும். சில நேரங்களில் காலதாமதாகவும் திறக்கப்படும்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வந்ததால் வழக்கம் போல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

அதற்கு ஏற்றபடி குறுவை சாகுபடிக்கும் விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார்.

இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 5-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு சென்னை திரும்புகிறார்; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.


Next Story