ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு குறவன் மக்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு குறவன் மக்கள் நலச்சங்கத்தினர் மாநில தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சமூக நீதி அடிப்படையில் தமிழக ஆதிதிராவிடர் பட்டியலில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக உள்ள இட ஒதுக்கீட்டில் குறவர் மற்றும் சித்தனார் சாதி மக்களுக்கு குறைந்தது 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இது தொடர்பான மனுவையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.


Next Story