பேரிடர் மேலாண்மை பயிற்சி


பேரிடர் மேலாண்மை பயிற்சி
x

தாணிக்கோட்டகம் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தாணிக் கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், தகட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட பேரிடர் பயிற்றுனர்கள் அன்னபூரணி, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். பின்னர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story