அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு


அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
x

வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

விருதுநகர் ரோசாப்பட்டி முருகன் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமம் முசிறி சந்திப்பு சாலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.

வாலாஜா அரசு மருத்துவமனையில் மதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story