மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி தீக்குளித்து தற்கொலை


மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி தீக்குளித்து தற்கொலை
x

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கெண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் தனவேல் மகன் பிரசாத்(வயது 35). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளாராம். இதனால் மனவேதனை அடைந்த பிரசாத் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த பிரசாத் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story