விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 1 Jun 2023 9:58 AM GMT)

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை அருகே உள்ள கருவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 47). விவசாயியான இவருக்கு நீண்ட நாட்களாக வயிறு வலி இருந்ததாக கூறப்பகிறது. சம்பவத்தன்று சுடலை தனது தோட்டத்தில் வைத்து பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுடலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story