திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்


திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
x

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

அதில் நிலஅபகரிப்பு, பண மோசடி, பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான மனுக்களே அதிகமாக இருந்தது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் சில மனுக்கள் அந்தந்த போலீசின் நிலையங்களுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story