கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்து


கொடுமுடி அருகே  சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்து
x

கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்தில் புதுமண தம்பதி உயிர் தப்பினர்.

ஈரோடு

கொடுமுடி

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியை சேர்ந்த மருத்துவர் பாலாஜி (வயது 30). இவருடைய மனைவி சுகன்யா (29). 2 பேரும் புதுமண தம்பதி ஆவர். பாலாஜியின் தம்பி வெங்கடரமணன். இவர்கள் 3 பேரும் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையத்தில் உள்ள பாலாஜியின் மாமனார் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சோழசிராமணிக்கு நேற்று காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

ஈரோடு- கரூர் சாலையில் காலை 10 மணி அளவில் கொடுமுடிைய அடுத்த சோளக்காளிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சுவற்றின் மீது கார் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story