குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
x

தேனியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பெரியகுளம் சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story