காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பிலான 10 மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் எந்திரம், ரெஹோபோத் மற்றும் பத்மா சுப்ரமணியம் என்ற இரு மனவளர்ச்சி குன்றிய சிறப்புப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மனவளர்ச்சிக்குன்றிய சிறார்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்கான 2 சாதனத்தையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரமும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story