போலீஸ் கொடி அணிவகுப்பு


போலீஸ் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

கடையநல்லூரில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தியதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் கடையநல்லூரில் ஆயுதப்படை போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்புக்கு புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக் தலைமை தாங்கினார். கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் இதில் கலந்து ெகாண்டனர்.

இந்த கொடி அணிவகுப்பு பேரணி கிருஷ்ணாபுரம் அண்ணா சிலையில் இருந்து தொடங்கி முத்து கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய தெரு, புதூர் பள்ளிக்கூடம் தெரு, பஜார் ரோடு, மதீனா நகர், பேட்டை, ஆஸ்பத்திரி மேற்கு மலம்பாட்டை ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



Next Story