சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785-க்கு விற்பனை- ஒரே நாளில் கிலோவுக்கு 420 ரூபாய் விலை உயர்ந்தது


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785-க்கு விற்பனை- ஒரே நாளில் கிலோவுக்கு 420 ரூபாய் விலை உயர்ந்தது
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1,785 ரூபாய்க்கு விற்பனையானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1,785 ரூபாய்க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,785-க்கும், முல்லை ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,050-க்கும், செண்டுமல்லி ரூ.72-க்கும், பட்டுப்பூ ரூ.145-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.860-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.

விலை உயர்ந்தது

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,365-க்கும், முல்லை ரூ.1,320-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.47-க்கும், பட்டுப்பூ ரூ.150-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.

அதன்படி பார்த்தால் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 420 ரூபாய் விலை உயர்ந்தது.


Next Story