விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்


விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்
x

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேளாண்மைப்பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி 2021-22 திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருப்பத்தூர் சிவசக்தி நகரில் புதுப்பேட்டை சாலையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு, குறு விவசாயி சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.


Next Story