விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 31 Jan 2023 6:55 PM GMT (Updated: 1 Feb 2023 10:09 AM GMT)

விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம்(வயது 41). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம், வைத்திலிங்கம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.


Next Story