புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மணல்மேடு கடைவீதியில் புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு கடைவீதி பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவருபவர் கிழாய் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 48). இவரது கடையில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்தனர். அப்போது 2 பாக்கெட் ஹான்ஸ் என்ற புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story