2 விசைப்படகுகள் பறிமுதல்


2 விசைப்படகுகள் பறிமுதல்
x

விதிமுறைகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;


விதிமுறைகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீன்பிடி தொழில்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த, மீன்பிடி விசைப்படகுகள், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், வாரம் முழுவதும் தங்கி மீன்பிடி தொழில் செய்வதால் தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதமாகிறது என்றும் வெளிமாவட்ட மீனவர்களால், மீன்பிடித்தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

ஆய்வு

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் அறிவுரையின் பேரில், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, 2 விசைப் படகுகளில், மீன்வள ஆய்வாளர் ஆனந்தன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர், நவநீதன், காவலர்கள் ராஜா, சரவணன்குமார் மற்றும் மீனவர்கள் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 விசைப்படகுகள் பறிமுதல்

ஆய்வின் போது முத்துப்பேட்டை வாய்க்கால் அருகே 2½ நாட்டிகல் மைல்களுக்குள் காரைக்காலை சேர்ந்த விசைப்படகின் உரிமையாளர் உதயகுமார் மற்றும் தொழிலாளர்கள் 9 பேர் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது காரைக்கால் மீனவர்கள் மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டு, போலீசார்கள் வந்த படகுகளை மோதி சேதம் விளைவித்து விட்டு தப்பி் செல்ல முயன்றனர்.உடனே போலீசார் படகில் இருந்த மீனவர்களின் உதவியோடு அந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் சுமார் 2 டன் மீன்கள் இருந்தன.. மேலும் விசைப்படகின் வீல் ஹவுஸ் பூட்டி வைக்கப்பட்டு படகின் சாவி மல்லிப்பட்டினம் மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story