குறுவட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன்


குறுவட்டார தடகள போட்டி:  ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன்
x

சங்கரன்கோவில் குறுவட்டார தடகள போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது

தென்காசி

திருவேங்கடம்:

சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 38 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டன, இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், பெண்கள் அணி 100 மீட்டர் ஓட்டம், நானூறு மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடின. இதில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம,் 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீகலைவாணி பள்ளிபெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ், தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

வட்டார அளவில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story