குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை


குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை
x

திருவாரூரில் குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூரில் குண்டும், குழியுமாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் நகர் வழியாக செல்கின்றது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் திருவாரூர் நகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்லமால், புறவழி வழி சாலையாக அமைத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவாரூர் நகர் பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் பல ஆண்டுகளாக முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையானது பழுதடைந்தாலும் உடனடியாக சீரமைப்பு பணிகள் நடைபெறுவதில்லை. தஞ்சை-நாகை செல்லும் பிரதான சாலை என்பதால் அதிகமான வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சாலை நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்து பல இடங்களில் கம்பிகள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறியுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

குறிப்பாக திருவாரூர் வாளவாய்கால் பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளது. இந்த பள்ளங்களில் மழை பெய்தால் தண்ணீர் குளம் போல்தேங்கி நிற்கும். இதே போல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலான சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விலை மதிப்பில்லாத உயிரிழப்பை தடுத்திடும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story