தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, தர்மபுரி, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story