பெண் சாராய வியாபாரி கைது


பெண் சாராய வியாபாரி கைது
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

விழுப்புரம்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கீழ்தனியாலம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி ஜெயப்பிரதா(வயது 37). இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ஜெயப்பிரதாவை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜெயப்பிரதாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயப்பிரதாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story