நாகையில் இருந்து ஈரோட்டுக்குரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல்


நாகையில் இருந்து ஈரோட்டுக்குரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல்
x

நாகையில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் ரெயிலில் வந்தது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாகையில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றினார்கள். பிறகு சேமிப்பு கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.


Next Story