ஜூன் 4-க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது: அண்ணாமலை


ஜூன் 4-க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது: அண்ணாமலை
x

டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்தக் கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை கூறியதாவது: தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம்;டெல்லியில் பாஜக இந்த முறை 60% வாக்குகள் பெறும்;

3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், அது காலத்தின் கட்டாயம்;டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு பாஜக வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை தேர்தல் முடிவுக்கு பிறகு பார்ப்பார்கள். அதன்பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது" என்றார்.


Next Story