நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து வாலிபர் பலி


நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து வாலிபர் பலி
x

டிப்பர் டிராக்டரில் இருந்து திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தில் வாலிபர் பலியானர்.

பாகூர்

விழுப்புரம் மாவட்டம் பட்டரைபாதி பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் அரிகிருஷ்ணன் (வயது 20). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்ன கரையாம்புத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் சென்ற டிப்பர் டிராக்டரில் இருந்து திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டுப்பாட்டை இழந்து அரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அரிகிருஷ்ணனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story