தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

திருநள்ளாறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிளங்கை பகுதியை சேர்ந்தவர் ஆடியபாதம். அவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஹரீஸ் (வயது20), ஆகாஷ் (18) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். ஆடியபாதம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து திருமருகளில் தனியாக வசித்து வருகிறார். ஆகாஷ் பிளஸ்-2 முடித்துவிட்டு, பி.காம் படிக்க விண்ணப்பித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று பகல் ஆகாஷ் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தனது தங்கையை கண்டித்த ஆகாஷ் தாயாரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ், வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story