லைவ் அப்டேட்ஸ்: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் விளக்கம்


LIVE
லைவ் அப்டேட்ஸ்: சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் விளக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2024 1:16 AM GMT (Updated: 16 Oct 2024 4:18 PM GMT)

சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

Live Updates

  • 16 Oct 2024 7:52 AM GMT

    புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்வு

    கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

  • 16 Oct 2024 7:46 AM GMT

    சோழவரத்தில் அதிகபட்ச மழை

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக ரெட் கில்சில் 28 செ.மீட்டரும், ஆவடியில் 25 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கத்திவாக்கத்தில் 23 செ.மீட்டரும், மணலியில் 23 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.



     


  • 16 Oct 2024 7:35 AM GMT

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். 


  • 16 Oct 2024 7:20 AM GMT

    கொளத்தூர் அன்னை இந்திரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்ட காட்சி



     


     


  • 16 Oct 2024 7:13 AM GMT

    சென்னை கொரட்டூரில் தேங்கி நிற்கும் மழை நீரில் படகு, ஜேசிபி-யில் மக்கள் செல்லும் காட்சி







     


     


     


  • 16 Oct 2024 5:58 AM GMT

    கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம் சாலை பகுதியில் நேற்று மழை நீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் நீரை அகற்றினர். தற்போது அந்த பகுதியில் முழுமையாக மழை நீர் வடிந்துள்ளது. 

  • 16 Oct 2024 5:36 AM GMT

    நிவாரண முகாம்களில் மக்கள்

    சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

  • 16 Oct 2024 5:24 AM GMT

    அம்மா உணவகத்தில் இலவச உணவு

    சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  • 16 Oct 2024 5:11 AM GMT

    சென்னையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பிறகு 4.30 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. திருவள்ளூரில் 4.90 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.


Next Story